ஸ்ரீ தலதா வழிபாட்டை முன்னிட்டு, ஏற்படக்கூடிய சன நெரிசலைத் தவிர்ப்பதற்குக் கண்டி நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் மூடப்பட்டிருந்த 24 பாடசாலைகளும் நாளை(28) திறக்கப்படவுள்ளன.
அத்துடன், பாதுகாப்புப் பிரிவினரின் தங்குமிடமாகப் பயன்படுத்தப்பட்ட 37 பாடசாலைகள் நாளை மறுதினம்(29) மீளத் திறக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

