புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் நடத்திய தேசிய மட்ட கலை இலக்கியப் போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 15
விருதுகள் பெற்றுள்ளன.
பத்தரமுல்லையில் உள்ள சுஹதிருபாயவின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற தேசிய மட்டத்திலான தமிழ் மொழி மூல போட்டிகளில் 13 விருதுகளையும் ஆங்கில மொழி மூலத்தில் இரண்டு விருதுகளையும் சுவிகரித்துள்ளனர்.
இந் நிகழ்வில் இலங்கையின் இலக்கியத்துறைக்கு கால்பதிக்கும் இளம் படைப்பாளிகளில் தேசிய மட்டத்தில் வெற்றியீட்டியவர்களுக்கான கெளரவம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

