தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடவத்த இலங்கை போக்குவரத்து சபை டிப்போ பேருந்து திடீரென பிரேக் கட்டுப்பாட்டை இழந்து, ஓட்டுநர் ஒரு மலையில் மோதியதாகவும் பின்னர் பேருந்தை நிறுத்தியதாகவும் கினிகத்தேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன்-கொழும்பு பிரதான சாலையில் உள்ள கினிகத்தேன கடவல மஹா வாங்குவா பகுதியில் இன்று (26) அதிகாலை 5:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
பேருந்து வளைவில் செல்ல முயன்றபோது, பேருந்தை கட்டுப்படுத்த இரண்டாவது கியரை மாற்றியதாகவும், அந்த நேரத்தில் பேருந்தின் பிரேக்கிங் சிஸ்டம் செயலிழந்ததால், பிரேக்குகளைப் பயன்படுத்தி ஒரு சாய்வான பகுதியில் உள்ள ஒரு மலையில் சென்று பேருந்தை நிறுத்தியதாகவும் மூன்று பிள்ளைகளின் தந்தையான மகேஷ் சுதர்சன் (49) தெரிவித்தார்.
விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 80 பயணிகள் இருந்தாகவும், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அந்த பயணிகளை வேறொரு பேருந்தில் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். பேருந்து நிறுத்தப்படாவிட்டால் நுவரெலியாவில் சுற்றுலாவிற்கு வந்த வேனில் பேருந்து மோதியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

