வல்லையில் கார் விபத்து : மூவர் படுகாயம்

யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் அச்சுவேலி வல்லைப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பாலத்திலுள் தடம் புரண்டது. இதில் மூவர் படுகாயமடைந்தனர்.

கார் சேற்றில் புதைந்த நிலையில் அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். திருநெல்வேலி ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த தாயும் தந்தையும், மகளும் இக்காரில் அச்சமயம் பயணித்துளனர். மகளின் கால்கள் முறிவடைந்துள்ளன எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த மூவரும் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *