வாகனத்தில் துப்பாக்கிச் சூடு : மேலும் இருவர் கைது

துசித ஹல்லோலுவவின் ஜீப்பில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு சந்தேக நபர்களை 2ஆம் திகதி திங்கட்கிழமை கைது செய்துள்ளார்கள்.

சந்தேக நபர்கள் 27 மற்றும் 37 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடவத்தை மற்றும் கணேமுல்ல பகுதிகளில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 13 T-56 உயிருள்ள வெடிமருந்துகள் மற்றும் 10 கிராம் ஐஸ் நிரப்பப்பட்ட வெடிமருந்து பெல்ட் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் இன்று  (03) அளுத்கடே நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *