இறுதி யுத்தத்தில் மரணித்தவர்களை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளான இன்று(18) வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.   அந்த வகையில் வவுனியாவிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.   வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா குருமண்காடு பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருந்தது.   அந்தணர் ஒன்றியத்தின் ஆலோசகர் ஜெயந்திநாத குருக்கள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பொதுமக்கள், அடியார்கள் மற்றும்Continue Reading

மட்டக்களப்பு கல்லடி பாலத்து வாவியில் இன அழிப்பு வாரத்தை நினைவு கூர்ந்து மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு இன அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் தூபியினைக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் கறுப்பு, சிவப்பு, மஞ்சள் கொடிகள் ஏற்றப்பட்டு மிதக்கும் வகையில் அமைக்கப்பட்ட இரண்டு மிதக்கும் தூபிகள் நேற்று(17) இரவு 9 மணியளவில் மிதந்து வந்ததையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.       குறித்த பாலத்தின் வாவி ஊடாக சம்பவதினமான இரவுContinue Reading

மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (18) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.   மேல், சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் 10 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. 75 டிகிரிக்கு மேல் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  Continue Reading

சாய்ந்தமருது வொலிவோரியன் பொது விளையாட்டு மைதானத்தை செப்பனிடும் இரண்டாம் கட்டப் பணி கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா தலைமையில் இன்று (18) ஆரம்பித்து வைக்கப்பட்டது.   இரண்டாம் கட்ட செப்பனிடும் பணியில் பல கனரக இயந்திரங்களைக் கொண்டும் விளையாட்டுக் கழகங்களின் பங்களிப்புடனும் மைதானம் விளையாடுவதற்கு ஏற்ற வகையிலும் செப்பனிடப்பட்டு, அதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளும் செவ்வனே இடம்பெற்றன.   செப்பனிடும் பணியானதுContinue Reading

முத்தமிழ் வித்தகரும் உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியருமான சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு 15 அடி உயரமான உலகின் முதல் கருங்கற் சிலை இன்று(17) மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.   சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டினை முன்னிட்டு மட்டக்களப்பு – சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையின் ஏற்பாட்டில் அதன் தலைவரும் முன்னாள் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளருமாகிய பாஸ்கரன் தலைமையில் கல்லடிப் பாலத்திற்கு அருகாமையில் நிர்மானிக்கப்பட்டுள்ள 15 அடிContinue Reading

வவுனியாவின் பல பகுதிகளில் இன்று(17) காலை முதல் மின்தடை ஏற்பட்டுள்ள நிலையில் மின்சாரசபைக்கு பலமுறை அறிவித்தும் பலன்இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.   வவுனியாவில் இன்று காலை முதல் கடும்காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் மின் தடை ஏற்ப்பட்டிருந்தது.   சில மணிநேரங்களின் பின்னர் குறிப்பிட்ட சில பிரதேசங்களுக்கு மின்விநியோகம் வழமைக்கு திரும்பியிருந்தது.   எனினும் மகாறம்பைக்குளம் மற்றும் தாண்டிக்குளத்தின் சில பகுதிகளில் காலை முதல்Continue Reading

2025 ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலத்திற்கான மின்சார கட்டணங்களை திருத்துவது தொடர்பான முன்மொழிவை இலங்கை மின்சார வாரியம் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.   ஜூன் முதல் தேதி முதல் மின்சாரக் கட்டணத்தில் 18.3 சதவீத உயர்வை முன்மொழிவதன் மூலம் இது சாத்தியமாகும்.   மின்சார வாரியத்திற்கு ஏற்படும் நிதி இழப்புகளைக் கருத்தில் கொண்டு இந்தக் கட்டணத் திருத்தம் முன்மொழியப்படுவதாக அவர்கள் தொடர்புடைய திட்டத்தில் கூறியுள்ளனர்.   மின்சாரContinue Reading

சம்மாந்துறை அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் 24வது வருடாந்த பொதுக் கூட்டமும்,2025/2026ம் வருடத்திற்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யும் கூட்டம் அதன் தலைவர் ஏ.எல்.எம் யாஸீன் (ஜே.பி) தலைமையில் இன்று(17) சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் இடம்பெற்றது.   இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மத் ஹனீபா கலந்து கொண்டு சிறப்பித்தார்.   அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் 2025/2024 ஆண்டுக்கானContinue Reading

தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் மறக்குமா மே-18 என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் முள்ளி வாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இன்று (17) வாகரை பால்சேனையில் பிரதான வீதியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. நிகழ்வில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.பொதுச்சுடரினை மாவீரர் ஒருவரின் தாயார் ஏற்றி வைத்தார்.அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு முள்ளி வாய்கால் கஞ்சி வழங்கப்பட்டது.இன,மத பேதமின்றி வீதியால் சென்ற பொதுமக்கள் அதனை அருந்தினார்கள். வருடா வருடம் தாயகச்Continue Reading

ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் காரணமாக இன்று (17) இரவு இயக்கப்படவிருந்த இரவு நேர அஞ்சல் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.   இதன்படி, 8 தபால் ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.   கொழும்பு – பதுளை, மட்டக்களப்பு – கொழும்பு, திருகோணமலை – கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் – கொழும்பு ரயில்கள் ரத்து செய்யப்படும்.   பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள்Continue Reading