முல்லைத்தீவு கடலில் ஒரு சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. அது 3.6 ரிக்டர் அளவுகோலாகும்.
நாட்டின் அனைத்து நில அதிர்வு கண்காணிப்பு நிலையங்களிலும் நிலநடுக்கம் சனிக்கிழமை(31) இரவு பதிவாகியுள்ளது.
ஹொரொவ்பத்தான, ரோட்டவெவ, மொரவெவ, குச்சவெளி, கிண்ணியா, திருகோணமலை உள்ளிட்ட பல பகுதிகளில் இதன் தாக்கம் உணரப்பட்டுள்ளது.

