போர் சூழலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் – மஹிந்த ராஜபக்ஷ!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் முடிந்தவரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (02) ஹோமாகம வரலாற்றுச் சிறப்புமிக்க இம்புலகந்த ஸ்ரீ சம்புத்தி விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

யுத்தத்தை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் முடிக்க வேண்டும்.

ஏனைய வல்லரசு நாடுகள் இதில் தலையிட்டுத் தீர்வுகாண வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என அவர் குறிப்பிட்டார்.

இதன்போது, கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பிலும் மஹிந்த ராஜபக்ஷ தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் முடிந்தவரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஏதேனும் காரணத்துடன் கைது செய்யப்பட்டிருந்தால் அது தொடர்பில் நீதிமன்றம் தீர்மானிக்கும்.

அரசியல் பழிவாங்கலுக்காகவும் அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *