தமிழர்களின் நிகழ்கால பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகள் தொடர்பான மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு தமிழர் பண்பாட்டு உணர்வாளர்கள் அமைப்பினால் நேற்று(28) மட்டக்களப்பு திருப்பழுகாமம் வெள்ளிமலை பண்பாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மகேந்திரனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன், சிறிநாத், திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அரியநேத்திரன், கிருஷ்ணபிள்ளை, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நடராசா, பிரதேச சபைத் தவிசாளர்கள், உறுப்பினர்கள், இலங்கைத் தமிழரசுக் கடசியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கலந்து கொண்டிருந்த மக்கள் பிரதிநிதிகள் உரையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

