வட பிராந்திய சத்தியசாயி நிறுவகத்தின் ஏற்பாட்டில் மணற்காட்டில் கடற்கரை சிரமதானம் இடம்பெற்றது.
இதில் மருதங்கேணி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மணற்காட்டு கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், வட பிராந்திய சத்தியசாயி நிறுவகத்தின் தொண்டர்கள், பருத்தித்துறை பிரதேச சபை ஊழியர்கள், உத்தியோகத்தர்கள், பருத்தித்துறை பிரதேச சபை சபை 8வட்டார உறுப்பினர் அகஸ்ரின், பருத்தித்துறை முதலுதவி சங்கம், மணல்காட்டு அபிவிருத்தி சங்கங்கள், பொதுஅமைப்புக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

