மாதகல் பகுதியில் வசிக்கும் பொருளாதார ரீதியாக நலிவுற்ற, தெரிவு செய்யப்பட்ட 40 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் நேற்றைய தினம்(28) வழங்கி வைக்கப்பட்டன.
அகில இலங்கை மீனவ மற்றும் தொழிலாளர்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியத்தின் 75 வது பிறந்தநாளையொட்டி இந்த உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த உலருணவு பொதிகள் மாதகல் – பரிமளகந்தி படிப்பகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.

