யுவதிவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குடும்பஸ்தர் கைது!

அக்கரைப்பற்றில் யுவதி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த 46 வயதுடைய ஆண் ஒருவர் கைது

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் யுவதி ஒருவரை தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த 46 வயதுடைய நபர் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (27) அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரியவருவதாவது, குறித்த பிரதேசம் ஒன்றைச் சேர்ந்த யுவதி ஒருவரை அந்த பகுதியைச் சேர்ந்த திருமணம் முடிக்காத 46 வயதுடைய ஆண் ஒருவர் தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த யுவதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து குறித்த நபரை சம்பவதினமான நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் அந்த பகுதியில்  நீண்ட காலமாக இவ்வாறு பல பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *