கொழும்பு மாநகர சபை ஊழல் தொடர்பாக பொதுமக்களிடம் கோரிக்கை!

2010ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, இது தொடர்பான விசாரணைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளது.

 

மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடி, நம்பிக்கையீனம், அரச சொத்துக்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம், சட்டவிரோத நியமனங்கள், கொள்முதல் நடைமுறை மீறல்கள் மற்றும் சொத்துக்களை குத்தகைக்கு விடுவதில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு, இது தொடர்பான தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

இவ்வாறு பொதுமக்களின் முறைப்பாடுகளைப் பெறுவதற்கான காலக்கெடுவானது எதிர்வரும் மார்ச் மாதம் 16ஆம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

 

யாராவது ஒரு நபரோ அல்லது அமைப்போ அல்லது நிறுவனமோ தமது முறைப்பாடுகளை சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுத்துப்பூர்வமாகவே அல்லது தகவல்களாகவே கீழே உள்ள முகவரியில் உள்ள ஆணையத்தின் செயலாளருக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

அத்தகைய புகார்கள் அல்லது தகவல்களை வழங்கும் நபரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு இலக்கம் என்பன கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும். (தமது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாதவர்கள்,

 

அது குறித்து ஆணைக்குழுவிடம் கோர முடியும்).

 

தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள்:

 

முகவரி: இலக்கம் 152, காலி வீதி, கொழும்பு 03.

 

தொலைபேசி இலக்கம்: 0112 301 735 வாய்மொழி வாக்குமூலங்களை வழங்க விரும்புவோர், இந்த இலக்கத்திற்கு அழைத்து திகதியை முன்பதிவு செய்து கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *