மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர் உயிரிழப்பு!

காரைதீவைச்  சேர்ந்தவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் மருத்துவராக பணியாற்றி வந்த  மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி [ MBBS ] அவர்கள் சுகவீனம் காரணமாக  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (20)  உயிரிழந்தார்

அம்பாறை காரைதீவை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு அரசடியில் வசித்து வந்தவரும் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மருத்துவ படிப்பை நிறைவு செய்து பின் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் கடமையாற்றி பின் மட்டக்களப்பு வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த   மருத்துவர்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *