நுவரெலியாவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ச்சியாக பிற்பகல் வேளைகளில் கன மழை பெய்து வருகிறது.
இன்றும்(28) பெய்த பலத்த மழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக நுவரெலியாவில் அதிகமான தாழ்நிலப் பகுதிகள் முற்றாக மூழ்கியுள்ளன.

