மாற்றுத் திறனாளிகளின் தேசிய கொள்கைப் புதுப்பித்தல் தொடர்பான கலந்துரையாடல்!

மாற்றுத் திறனாளிகளின் தேசிய கொள்கைப் புதுப்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் மேற்பார்வையின் கீழ் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி சந்திரகலா கோணேஸ்வரன் ஏற்பாட்டில் மாற்று திறனாளி அமைப்புக்களின் ஐக்கிய முன்னனி செயலாளர் பிரசன்ன குருப்பு பங்கு பற்றுதலுடன் புதிய மாவட்ட செயலகத்தில் நேற்று (17) இடம் பெற்றது.

சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் செயற்படும் மாற்று திறனாளிகள் தேசிய கவுன்சில் மற்றும் மாற்று திறனாளிகள் அமைப்புகளின் ஐக்கிய முன்னணி ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய கொள்கையில் உள்வாங்கப்பட வேண்டிய பல்வேறுபட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இந் நிகழ்வில் மாற்றுத்திறனாளி அமைப்புக்களின் பிரதிநிதிகள் அரச சார்பற்ற நிறுவன உயர் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *