மட்டக்களப்பில் மழையினால் அறுவடை செயற்பாடுகளில் பாதிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் தென்கிழக்கே நிலவிய சுழற்சியானது தாழ்வுப்பகுதியாகி அதே இடத்தில் நீடிப்பதன் காரணமாக தொடர்ச்சியாக மழையினை எதிர்பார்க்கமுடியும் என வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

நேற்று மாலை தொடக்கம் பெய்துவரும் கடும் அழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நிலைமைகள் ஏற்படும் நிலைமை காணப்படுகின்றது.

குறிப்பாக தாழ்நிலங்கள் வெள்ள நீரினால் மூழ்கும் நிலைமையேற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெரும்போக அறுவடைகள் நடைபெற்றுவருவதன் காரணமாக விவசாயிகள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதையும் காணமுடிகின்றது.

அறுவடை செயற்பாடுகள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதுடன் அறுவடை செய்தவர்கள் நெல்லை பாதுகாப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *