விஷ வாயுவை சுவாசித்த 13 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

மொரட்டுவ பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் இரசாயனம் கலந்த காற்றை சுவாசித்ததில் 13 மாணவிகள் பாதிக்கப்பட்டு பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையில் நடத்தப்பட்ட ஆய்வக பரிசோதனையின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாடசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிகளின் நிலை மோசமாக இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *