வாழைச்சேனையில் 3 ரொக்கட் லோஞ்சர் மீட்பு!

வாழைச்சேனை, குடும்பிமலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று சுவீடன் நாட்டுத் தயாரிப்பு ராக்கெட் லாஞ்சர்களை கண்டுபிடித்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலன்னறுவை இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அரலகங்வில சிறப்புப் பணிக்குழுவுடன் இணைந்து இந்த மூன்று ராக்கெட் லாஞ்சர்களையும் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாலத்சேனை, குடும்பிமலைப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்தபோது யாரோ ஒருவரால் இவை தோண்டி எடுக்கப்பட்டு அதே பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைப்பற்றப்பட்ட மூன்று ராக்கெட் லாஞ்சர்களும் சுவீடனில் தயாரிக்கப்பட்ட 84மிமீ ஆர்.சி.எல் எம்2 வகை ராக்கெட் லாஞ்சர்கள் என்றும், அவை பயன்படுத்த ஏற்றவை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *