ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் மோடி!

கொழும்பு கங்காராமய விஹாரையில் புனித தேவ்னிமோரி நினைவுச்சின்னங்களின் கண்காட்சியைத் திறந்து வைத்ததற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

” ​​இந்த நினைவுச்சின்னங்களை இலங்கைக்குக் கொண்டுவர ஏப்ரல் 2025 இல் எனது பயணத்தின் போது, முடிவு செய்யப்பட்டது, இதன் மூலம் மக்கள் அவற்றை வழிபட வாய்ப்பு கிடைத்தது. நமது இரு நாடுகளும் ஆழமான நாகரிகம் மற்றும் ஆன்மீக உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன. கருணை, அமைதி மற்றும் நல்லிணக்கம் என்ற காலத்தால் அழியாத புத்தரின் செய்தி மனிதகுலத்தை தொடர்ந்து வழிநடத்தட்டும்” என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *