புதையல் தோண்டிய நபர் கைது!

பதுளை – செல்வகந்த பகுதியில், சட்டவிரோதமாக புதையல் தோண்டிய சந்தேக நபர் ஒருவர் பதுளை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் நேற்று[2] கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சோதனை நடத்தியபோது, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, சந்தேக நபரிடமிருந்து அகழ்வாராய்ச்சி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர் நுவரெலியா பகுதியை சேர்ந்த 45 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பணியகம் மேற்கொண்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *