வாகரையில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகளுடன் 4 பேர் கைது!

வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கட்டுமுறிவு பிரதேசத்தில் சட்டவிரோதமான  உள்ளுர்   தயாரிப் துப்பாக்கிகளுடன் 4 பேரை  நேற்று (29) விசேட அதிரடிப்படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து குறித்த பிரதேசத்தில் சம்பவ தினமான இன்று காலை வாகரை விசேட அதிரடிப்படை  முகாமின் பொறுப்பதிகாரி பி.பி.அமில தலைமையிலான குழுவினர் சுற்றிவளைத்து தேடுதல் நடாத்தினர்.

இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகள் 4 மீட்டதுடன் 32, 48, 28, 42 வயதுடைய  நான்கு பேரை கைது செய்தனர் இவர்கள் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் வன விலங்குகளை இறைச்சிக்காக துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடி வருபவர்கள் எனவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *