பங்களாதேஷ் அணி இந்தியா சென்று விளையாடுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க இன்று ( 22) வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் விளையாடுவதற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, தமது போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) கோரிக்கை விடுத்திருந்தது. இந்தக் கோரிக்கை மீதான வாக்கெடுப்பு ICC இல் நேற்று நடைபெற்றது.

