வலையிறவு மடத்துப் பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு

மட்டக்களப்பு – வலையிறவு மடத்துப் பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு இன்று(14) சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு விஷேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகியது.

ஆலய மகா கும்பாபிசேக நிகழ்வுகள், கடந்த வெள்ளிக்கிழமை, ஆலய பிரதம குரு, அருளானந்த சிவாச்சாரியார் குருக்கள் தலைமையில்
ஆரம்பமாகியது.

விசேட யாக பூசைகள் இடம்பெற்ற நிலையில், இன்றைய தினமும் நாளையதினமும் எண்ணெய்க் காப்பு இடம்பெறவுள்ளது.

எண்ணெய்க் காப்பு சாற்றல் நிகழ்வில் இன்றைய தினம் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு எண்ணெய்க்காப்பு சாத்தினர்.

இதேவேளை மகா கும்பாபிஷேகம், வருகின்ற திங்கட்கிழமை 16ஆம் திகதி இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *