மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவர் ஹசலக, வேரகந்தோட்டையைச் சேர்ந்த 57 வயதுடையவர் ஆவார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இந்த அதிகாரி, கடந்த சில நாட்களாக தனிப்பட்ட காரணங்களால் மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.