2024ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த பரீட்சைக்கான பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதிக்கு முன்னதாக வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் நடைமுறை சிக்கல்கள் காரணமாக 20ஆம் திகதிக்கு பின்னரே பெறுபேறுகளை வெளியிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

