கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு மேல், சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களுக்கும் காலி, மாத்தறை, நுவரெலியா, கண்டி மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கும் செல்லுபடியாகும்.
தீவு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருகிறது.
இதன் தாக்கம் காரணமாக, இன்று (19) மற்றும் அடுத்த சில நாட்களில் தீவின் தென்மேற்குப் பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா, கண்டி மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுத் துறை அறிவித்துள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதனமாக இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொள்கிறது.

