மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மங்கையற்கரசியார் குரு பூசை தின நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்து கலாசார உத்தியோகத்தரின் தலைமையில் செல்வாநகர் கிழக்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட ஒரு குழந்தைக்கு கல்வி புகட்டு இந்து நரசிம்மர் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களின் பங்குபற்றதலுடன் 2025.05.18ஆந்திகதி மு.ப 9.00 மணிக்கு இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது. இந் நிகழ்வில் மங்கையற்கரசியார் குரு பூசை தினம் பற்றிய விளக்கங்கள் அளிக்கப்பட்டது. பின்பு மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.


