சட்டவிரோத கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆண் ஒருவர் கரடியனாறு பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கித்துள் பாடசாலை வீதியைச் சேர்ந்த 50 வயதுடைய சுப்பையா சாந்தகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸாரின் தகவலின்படி, நேற்று(22) இரவு சுமார் 8.00 மணியளவில் 1500 மில்லிலீற்றர் சட்டவிரோத கசிப்புடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் கரடியனாறு பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்ட நிலையில், இன்று(23) அதிகாலை 4.30 மணியளவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப நீதிமன்ற உத்தரவு பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

