2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 7வது ஆண்டு நினைவேந்தல் இன்று செவ்வாய்க்கிழமை (21) மட்டக்களப்பு நகரின் பல்வேறு பகுதிகளில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில், காந்தி பூங்கா முன்றலில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

