நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து ஆர்சிபி அணி வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் விலகியுள்ளார்.
கடந்த தொடரில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார் யாஷ் தயாள்.
இந்தாண்டு அவர் இல்லாதது ஆர்பிசி அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் தனிப்பட்ட காரணங்களுக்காக நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

