நல்லாட்சி அரசாங்க காலத்தில் மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் உலர் மண்டல மேம்பாட்டு அமைச்சராகப் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டாரவிற்கு எதிராக இன்று (06) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.   சந்திராணி பண்டார, அமைச்சராக இருந்தபோது சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல், உலர் மண்டல மேம்பாட்டு அமைச்சின் திட்ட இயக்குநராக எச்.எம். சந்திரவன்சவை நியமித்ததாகவும், சட்டவிரோதமாகத் தனது நண்பர்களைப் பல்வேறு பதவிகளுக்கு நியமித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.  Continue Reading

நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை (05) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 449 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.   அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 119 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 161 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 156 பேரும், கஞ்சா செடிகளுடன் 04 பேரும், போதை மாத்திரைகளுடன் 09பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.   இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதுContinue Reading

மன்னாரில் உள்ள பிரபல உணவகம் ஒன்றின் முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவருக்கு மன்னார் நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (05) ஐந்து வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.   மேலும் குறித்த இருவரும் பணியாற்றிய உணவகத்துக்கு 83000 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.   மன்னார் நகர சபை பொது சுகாதார பரிசோதகரினால் மன்னார் மாவட்டத்தில் சாவற்கட்டு பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கையின்Continue Reading

இன்று (06) நண்பகல் 12 மணி முதல் கடலோர ரயில் சேவையில் இருந்து விலகுவதற்கான தீர்மானத்தை லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.   கடலோர ரயில் மார்க்கத்தில் உள்ள சமிக்ஞை அமைப்பின் குறைபாட்டிற்கு தீர்வு காணக் கோரி, இன்று நண்பகல் 12 மணி முதல் சேவையில் இருந்து விலக சங்கம் தயாராகியிருந்தது.   எனினும், இன்று காலை ரயில்வே பொது முகாமையாளருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் நேர்மறையானContinue Reading

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான கெஹெல்பத்தர பத்மேவுக்கு இரண்டு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைத் தயாரித்ததாகச் சந்தேகிக்கப்படும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளர் உட்பட மூன்று சந்தேக நபர்களையும் பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டது.   அதன்படி, ஒவ்வொரு சந்தேக நபரையும் தலா ஒரு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலிContinue Reading

நேற்று (05) மாலை கட்டுநாயக்காவிலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்ட ஶ்ரீலங்கன் விமானம் UL 306, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தோனேசியாவின் மேடான் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.   இந்தோனேசிய தொழில்நுட்பக் குழு விமானத்தைப் பரிசோதித்த பின்னர், குறைபாட்டைச் சரிசெய்ய சில மணி நேரம் ஆகும் எனத் தெரிவித்ததால், பயணிகளை ஹோட்டல் அறைகளில் தங்கவைக்க இலங்கை அதிகாரிகள் முடிவு செய்தனர்.   எனினும், இந்தோனேசிய அதிகாரிகள் பயணிகளை ஹோட்டல்களில் தங்கContinue Reading

மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் ஹசலக, வேரகந்தோட்டையைச் சேர்ந்த 57 வயதுடையவர் ஆவார்.   இரண்டு பிள்ளைகளின் தந்தையான இந்த அதிகாரி, கடந்த சில நாட்களாக தனிப்பட்ட காரணங்களால் மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.Continue Reading

ஐந்து துணை வைத்திய தொழில்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் இன்று (06) இரண்டாவது நாளாகவும் தொடரும் என்று துணை வைத்திய தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பின் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.   இந்த 24 மணி நேர வேலைநிறுத்தத்தை நேற்று (05) காலை 8 மணிக்கு ஆரம்பித்து இன்று காலை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டது.   இருப்பினும், நேற்று கூடிய துணை வைத்திய தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பின் நிர்வாகக்Continue Reading

சமாதான நீதவான் நியமனம் தொடர்பான கட்டளைகள் பலவற்றைத் திருத்தி, நீதி அமைச்சரினால் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.   ஏனவே நியமனம் வழங்கப்பட்டவர்களுக்கு இந்த வர்த்தமானியின் ஊடாக பாதிப்பு ஏற்படாது என்று நீதியமைச்சு தெரிவித்துள்ளது.   நிர்வாக மாவட்டங்களுக்கான சமாதான நீதவான் நியமனத்தின் போது 30 வயதுக்குக் குறையாத மற்றும் 75 வயதுக்கு மேற்படாதவர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டளை இணைக்கப்பட்டுள்ளது.   மேலும், முழு நாட்டுக்குமான சமாதானContinue Reading

குளியாபிட்டி-மாதம்பே வீதியில் கனதுல்ல பகுதியில் வேன் ஒரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிள் எதிர்த்திசையில் வந்த பேருந்துடன் மோதி பாரிய விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.   குளியாபிட்டியிலிருந்து மாதம்பே நோக்கி பயணித்த வேன், அதே திசையில் சென்ற மோட்டார் சைக்கிளை முந்த முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது.   இதனால், எதிரே வந்த பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்திருந்தContinue Reading