இன்று முதல் மின்சார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

இன்று நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காததைக் கண்டித்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான தீர்மானத்தை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு தொழிற்சங்கங்கள் கடிதம் மூலம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *