ரணிலுக்கும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் இடையே பேச்சுவார்த்தை!

எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அவரது அலுவலகத்தில் புதன்கிழமை (25) அன்று சந்தித்து, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய கூட்டு வழிமுறைகள் குறித்து விவாதித்தனர்.

நாட்டில் பல கட்சி அமைப்பைக் காப்பாற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்ற மகாநாயக்கரின் ஆலோசனையைப் பின்பற்றி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரை நாங்கள் ஏற்கனவே சந்தித்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.

பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பிவிதுரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர ஆகியோர் இந்த கலந்துரையாடல்களில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *