இலங்கை கடற்படை, மன்னாருக்கு தெற்கே இலங்கை கடல் பகுதியில் கடந்த ( 22) இரவு நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக 01 இந்திய மீன்பிடி படகு மற்றும் 12 இந்திய ளை கடற்படையினர் கைப்பற்றினர்.
மன்னாருக்கு தெற்கே உள்ள உள்ளூர் கடல் பகுதிக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பல இந்திய மீன்பிடி படகுகளை கடற்படையினர் கண்காணித்தனர்.
மேலும் அந்த மீன்பிடி படகுகளை நாட்டின் கடல் பகுதியில் இருந்து அகற்ற வட மத்திய கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கப்பல்களால் ஒரு சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அந்த நேரத்தில், உள்ளூர் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டிருந்த 01 இந்திய மீன்பிடிப் படகில் இலங்கை கடற்படையினர் சட்டப்பூர்வமாக ஏறி ஆய்வு செய்ததுடன், எல்லை சட்டங்களை மீறி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒரு 01 இந்திய மீன்பிடிப் படகுடன் 12 இந்திய மீனவர்களும் கடற்படையினரால் பிடிக்கப்பட்டனர்.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடி படகு மற்றும் இந்திய மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திக்கோவிட்ட மீன்வள ஆய்வு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

