சமகாலத்தில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறையாவது குளிக்க வேண்டும் என்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் காலையிலும் மாலையிலும் தலா 20 நிமிடங்கள் சிறுவர்கள் குளிப்பதே பொருத்தமானது என அவர் கூறியுள்ளார்.
பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சூரியனின் உச்சம் காரணமாக, வெப்பமான வானிலை நாட்டை பாதிக்கும்.

