இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு தர ஜேலர், தர ஜேலர், சார்ஜன்ட், கட்டுப்பாட்டாளர், தாதி, மருந்தாளர் போன்ற பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளது.
சிறைச்சாலைகள் திணைக்களத்தில் கடமையாற்றி ஓய்வுப் பெற்றுள்ள 65 வயதிற்கு குறைந்த சிறைச்சாலை அதிகாரிகளின் பதவிகளுக்கென இவ்வாறு புதியவர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விபரங்களை www.prisons.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

