தயசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு தடை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் தயசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்குத் தடை விதித்து, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (17) இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தயசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவைப் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *