சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் ஏற்பாட்டில் ஆர்ட் டயறி என்னும் ஓவியக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
நிறுவகத்தின் கட்புலமும் தொழில்நுட்பமும் கலைகள் திணைக்களத்தின் மாணவி இராசரத்தினம் யாழினியின் தனிக்கலைக் கண்காட்சியே இவ்வாறு நடைபெறவுள்ளது.
நாளை(11) நண்பகல் 2 மணிக்கு சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவக ஓவியக் கூடத்தில் இக்கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இந் நிகழ்வுக்கு சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இக் கண்காட்சியானது நாளை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(13) வரை நடைபெறவுள்ளது.


