அநுர ஹெலிகப்டர் மூலம் கண்டிக்குச் சென்றார்–சாமர கைதட்டி மகிழ்ச்சி!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முதன்முறையாக ஹெலிகப்டர் மூலம் கண்டிக்குச் சென்றுள்ளதாக தெரிவித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் நேற்று[06]
நாடாளுமன்றத்தில் தானாகவே கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போது உரையாற்றிய அவர், எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் உத்தியோகபூர்வ பயணங்களுக்கு ஹெலிகப்டர்களைப் பயன்படுத்துவதை ஜனாதிபதி விமர்சித்திருந்தார் என நினைவூட்டினார்.
எனினும், தற்போது ஜனாதிபதி விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகவும், ஜனாதிபதியின் கடமைகளை திறம்பட நிறைவேற்றுவதற்கு இது முக்கியமானது என்றும் சாமர சம்பத் தெரிவித்தார்.
“ஜனாதிபதி இப்போது ஹெலிகப்டரைப் பயன்படுத்துவது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன், ஏனென்றால் ஜனாதிபதியின் பணிகளுக்கு அது முக்கியமானது,” என அவர் கூறினார்.
இந்நிலையில், ஜனாதிபதி திஸாநாயக்க இன்று கண்டியில் இருந்தபோதிலும், அவர் அங்கு எவ்வாறு பயணித்தார் என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை.
பதவியேற்றதிலிருந்து, ஜனாதிபதி திஸாநாயக்க உள்நாட்டுப் பயணங்களுக்கு அரிதாகவே ஹெலிகப்டர்களைப் பயன்படுத்தி, பெரும்பாலும் உத்தியோகபூர்வ நிகழ்வுகளுக்காக வீதிப் போக்குவரத்தையே பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய விஜயத்திற்காக பயன்படுத்தப்பட்ட போக்குவரத்து முறை குறித்து, ஜனாதிபதி அலுவலகத்திடமிருந்து இதுவரை உத்தியோகபூர்வ விளக்கம் எதுவும் வெளியிடப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *