மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் குதித்து யுவதி ஒருவர் தற்கொலை முயற்சி செய்துள்ள நிலையில், அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது.
இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.
எனினும், குறித்த யுவதியை அந்த பகுதியில் இருந்த இளைஞர்கள் மற்றும் பொலிசார் ஒன்றிணைந்து காப்பாற்றி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

