இந்தியத் துணை ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளார்.

அவருடன் 49 பேர் கொண்ட தூதுக்குழுவினரும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.

அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்திய விமான சேவைக்குச் சொந்தமான ‘INDIA – 01’ ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்துள்ளனர்.

இந்தத் தூதுக்குழுவினரை வரவேற்பதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் அதிவிசேட விருந்தினர் முனையத்திற்கு வருகை தந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *