மேற்கு ஆசியாவில் தொடரும் போர் மற்றும் பதற்றங்களைச் சுற்றிய சூழலில், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பில், பிராந்திய பதற்றங்களின் பின்விளைவுகள் மற்றும் அவற்றின் விரிவான தாக்கங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதாக ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் ஸ்திரத்தன்மையின் முக்கியத்துவம், மற்றும் இந்தியாவின் “அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை” கொள்கை குறித்து அவர் வலியுறுத்தினார்.
2026-03-24

